காரைக்குடியில் கொள்ளை வழக்கில் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உட்பட 6 பேர் கைது : பணம், நகைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
Mar 18 2023 2:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பணம், நகை கொள்ளை வழக்கில் ஊர் காவல் படையைச் சேர்ந்தவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்குடி முத்துப் பட்டிணம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவர், சென்னையிலிருந்து ஒரு கிலோ நகை, மற்றும் 2 கோடி ரூபாய் பணத்துடன் கடந்த 12ம் தேதி அதிகாலை கழனிவாசல் பேருந்து நிறுத்ததில் இறங்கும்பொழுது அவரை கொள்ளையர்கள் கடத்திச் சென்று தங்கம் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு இறக்கி விட்டனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில், சென்னை ஊர்க்காவல் படையில் பணி புரியும் சதீஷ் என்பவர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனடிப்படையில் சூர்யா, விஜயகுமார், சாமுவேல், பால்ராஜ், சதீஸ், பெருமாள் ஆகியோரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.