திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி : 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
Mar 18 2023 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. குளத்தூராம்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 காளைகள் பங்கேற்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, போட்டியை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கமோதிரம், LEDTV, கட்டில், சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.