திருச்சியில் திருமண ஆசைக்காட்டி கர்ப்பமாக்கி தப்பி சென்ற வடமாநில வாலிபர் அசாமில் கைது : பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஓராண்டுக்குப் பின் நடவடிக்கை
Mar 18 2023 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருமணம் செய்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கி தப்பிச்சென்ற நபரை ஒரு ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்து நொச்சியம் பகுதியை சேர்ந்த சினேகா என்பவர், கடந்த 2 வருடத்திற்கு முன்பு அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த குவாதர் அலியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், குவாதர் அலி சினேகாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பமான சினேகா திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் குவாதார அலி அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதுகுறித்து சினேகா அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசாருக்கு குவாதார அலி அஸாமில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்று குவாதர் அலியை கைது செய்து மண்ணச்சநல்லூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.