பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - சிஐடியு அறிவிப்பு
Mar 18 2023 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி என்டிபிஎல் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தீர்வு காணப்படாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அனல் மின் நிலையத்தில் கரி கையாளும் பகுதியில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் என்டிபிஎல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில் என்டிபிஎல் அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.