நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தனியார் மில்லில் இருந்து வெளிவரும் கழிவுகளால் விவசாயம் பாதிப்பு
Mar 18 2023 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தனியார் மில்லில் இருந்து வெளிவரும் கழிவுகள் அங்குள்ள குளத்தில் கலப்பதால், பயிர் செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ரெட்டியபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பேப்பர் மில்லில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் அங்குள்ள பெரிய ஆனந்த குளத்தில் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், பயிர் செய்ய முடியாமல் 20 ஏக்கருக்கும் மேலாக தரிசு நிலமாக மாறியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாகவும், இந்த குளத்து நீரை குடிப்பதால் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.