திருவாரூர் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் காயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி
Mar 18 2023 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவர் காயம் அடைந்தார். புலிவலம் மாரியம்மன் கோயில் தெருவில் கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் பாஸ்கரன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பாஸ்கரனின் மகன்கள் பிரவீன் மற்றும் ராகுல் படித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பிரவீன் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரவீன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.