நெல்லையில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Mar 18 2023 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லையில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் - ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஒட்டுமொத்தமாக ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் நல சங்கம் சார்பில் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைமை அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.