சிவகங்கையில் விராமதி பேய்க் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா - மிக குறைந்த அளவே மீன்கள் கிடைத்தது
Mar 18 2023 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கீழச்செவல்பட்டி அருகே விராமதி பேய்க் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் விவசாய காலம் முடிந்த பின்னர், கண்மாயில் தேங்கி இருக்கும் தண்ணீரில் கிடக்கும் மீன்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிடிக்க விடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் திண்டுக்கல், நத்தம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மீன்களை பிடித்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டைவிட மீன்கள் மிக குறைந்த அளவே இந்த ஆண்டு கிடைத்தது.