மதுரை வடிவேல்கரை விளக்கு பகுதியில் 2 லாரிகள் மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழப்பு
Mar 18 2023 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை வடிவேல்கரை விளக்கு பகுதியில் கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி மீது சுண்டல் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். உடுமலைப்பேட்டையில் இருந்து கோழி தீவனங்களை ஏற்றி வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரியை, ஓட்டுநர் பூமிநாதன் வடிவேல் கரை விளக்கு பகுதியில் நிறுத்திவிட்டு டயரை மாற்ற முயன்றார். அப்போது கர்நாடகாவில் இருந்து சுண்டலை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் ஓட்டுநர் பெரியசாமி தூக்க கலக்கத்தில் இருந்ததால் வேகமாக வந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த லாரி ஓட்டுநர் பெரியசாமியின் உடலை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.