கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிநீர் சரியாக வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Mar 18 2023 5:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சரியாக குடிநீர் வழங்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலி குடங்களுடன் 2 மணி நேரமாக பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.