சிமெண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு
Mar 19 2023 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. முப்பந்தல் பகுதியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரியை பெர்னார்டு ஜோசப் என்பவர் ஓட்டி வந்துள்ளார். லாரி இரவிபுதூர்கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் குறுக்கே ஓடியவர் மீது மோதாமலிருக்க ஓட்டுநர் திடீரென திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகிலிருந்த கடை மீது மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாலையில் சாலையில் வாகனங்கள் குறைவாக காணப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.