பிரதமருக்கு எதிரான ஆவணப்படத்தை வெளியிட முயன்ற காங்கிரசார் - போலீசாருக்கும், காங்கிரசருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளால் பதற்றம்
Mar 19 2023 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் பிரதமருக்கு எதிரான ஆவணப்படத்தை வெளியிட முயன்ற காங்கிராஸாருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிக்கல் கடைத்தெருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தடை விதித்த பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை எல்இடி டிவியில் திரையிட முயன்றனர். அதை காவல் ஆய்வாளர் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காங்கிரஸார் ஆவணப்படத்தை திரையிடப் போவதை அறிந்த பிஜேபியினரும் அப்பகுதியில் திரண்டதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.