ஆலங்கட்டி மழையால் மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு - மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்
Mar 19 2023 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த ஆலங்கட்டி மழையால் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டிய நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குடியாத்தம் நெல்லூர்பேட்டை, பாக்கம், ராமாலை, காந்திநகர், மேலாளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.