வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.34 லட்சம் பணம் கையாடல் - ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்காக பணத்தை கையாடல் செய்த உதவி மேலாளர் கைது
Mar 19 2023 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட, 34 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த எஸ்.பி.ஐ. வங்கி உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடி காந்தி நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் (ராஸ்மிக்) கல்விக் கடன் பிரிவில் உதவி மேலாளராக யோகேஸ்வர பாண்டியன் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கல்வி கடன் காப்பீட்டுத் தொகை 34 லட்சத்து 10 ஆயிரத்து 622 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக எஸ்பிஐ வங்கியின் முதன்மை மேலாளர் சிவகுமார் அளித்த புகாரின் பேரில், யோகேஸ்வர பாண்டியனை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்தனர். அவர் கையாடல் செய்த 34 லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்றது குறிப்பிடத்தக்கது.