புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி - டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் தள்ளுமுள்ளு - போலீசார் தடியடி
Mar 19 2023 6:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். கந்தர்வக்கோட்டை அருகே உள்ள ராஜாப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஒரு பகுதியினர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு டோக்கன் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறி, தடுப்புகளை உடைத்துக்கொண்டு காளைகளை உள்ளே அழைத்துச் சென்றனர். இதனால் காவல்துறையினருக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.