விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி - விவசாய நிலங்களில் விழுந்த ஐஸ் கட்டிகளை கண்டு ரசித்த விவசாயிகள்
Mar 21 2023 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம், தோகைப்பாடி, பெரும்பாக்கம், காணை, அய்யூர் அகரம், ஜானகிபுரம், கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது வானத்தில் இருந்து கற்கள் கொட்டுவதை போல ஐஸ் கட்டிகள் வானில் இருந்து சரமாரியாக கொட்டியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போயினர். ஒரு சிலர் ஐஸ் கட்டிகளை சேகரித்து வைத்து அதனை சுவைத்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.