இந்தியா இன்னும் கால்பந்து விளையாட்டில் பேர் வாங்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து - சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டோ உருவாக்க வேண்டும் என்றும் விருப்பம்
Mar 21 2023 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் ரஜினிகாந்த், இந்தியா இன்னும் கால்பந்து விளையாட்டில் பேர் வாங்கவில்லை என்பது வருத்தளிப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர் ஒருவர் சென்னையில் கால்பந்து அகாடமி தொடங்க உள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி வெளியிட்ட வீடியோவில், தமிழ்நாட்டில் வேர்ல்டு கிளாஸ் யூத் கால்பந்து அகாடமி வருவது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று எனக் கூறியுள்ளார். சின்ன நாடுகள் கூட இந்த விளையாட்டை விளையாடி உலகம் முழுவதும் தெரிவதாக குறிப்பிட்டுள்ள ரஜினி, இந்தியா இதில் இன்னும் பேர் வாங்காதது வருத்தமான ஒன்று என்றும் சென்னையிலிருந்து மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரை இந்த அகாடமி கொடுக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.