டவர் பூங்கா சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று திறப்பு - டவர் பூங்கா கோபுரத்தின் மேல் முதியவர்கள் செல்லலிப்ட் வசதி வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
Mar 21 2023 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அண்ணா நகர் டவர் பூங்கா கோபுரத்தின் மேல் முதியவர்கள் சென்று ரசிக்க லிப்ட் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணா நகர் மண்டலத்தில் பதினைந்தரை ஏக்கர் பரப்பில், டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள கோபுரம், 135 அடி உயரம் உடையது. இந்த கோபுரத்தின் வாயிலாக, மத்திய சென்னையை முழுமையாக பார்க்க முடியும். கோபுரத்தின் மீது ஏறி காதலர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்ததால் கடந்த 2011 ஆண்டு முதல் கோபுரத்தின் மேல் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த முடிவு செய்து டவர் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று திறந்து வைக்கப்பட்டது.