சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை
Mar 21 2023 12:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த அனுமதி கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு, ஏப்ரல் 1 மற்றும் 2 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த வசந்தகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அர்ஜுன் சம்பத் வலியுறுத்தி வரும் நிலையில் எதிர்பாளர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, இந்து மக்கள் கட்சி சார்பாக அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.