கல்வராயன் மலைப்பகுதியில் 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - சாராயம் ஊறல் போட்ட நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Mar 21 2023 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஆயிரத்து 400 லிட்டர் சாராய ஊரலை போலீசார் அழித்தனர். கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார், கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மணியார் பாளையம் கிராமத்தில் வெள்ளையாறு அருகே மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரலை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 7 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த ஆயிரத்து 400 லிட்டர் சாராய ஊரல்களை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். மேலும் குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.