நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் நகைகளை திருடியவர் கைது.... வீட்டில் வேலை செய்த பெண், நகைகளை திருடியது விசாரணையில் அம்பலம்

Mar 21 2023 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் நகைகள் மாயமான விவகாரத்தில் வேலைக்கார பெண் ஈஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனது லாக்கரில் இருந்த 60 சவரனுக்கும் மேலான நகைகள் கொள்ளை போனதாக திங்கட்கிழமை அன்று தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார்.

தனது புகாரில் மூன்று வேலையாட்கள் மீது சந்தேகம் இருப்பதாக ஐஸ்வர்யா கூற மூவரையும் பிடித்து தேனாம்பேட்ட போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் தனுஷ் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்ற வேலைக்கார பெண் நகைகள் திருடியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக நகைகளை திருடியதையும், நகைகளை விற்று தனது கணவர் அங்கமுத்து உடைய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியதாகவும், அந்த பணத்தில் சொத்துகள் வாங்கி இருப்பதாகவும் போலீசாரிடம் ஈஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து திருடிய நகைகளை ஈஸ்வரி யாரிடம் விற்றார் என விசாரணை நடத்தி வரும் போலீசார் திருடு போன நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00