மதுரையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த கோயில் காளை : மலர் தூவி அஞ்சலி செலுத்தும் கிராம மக்கள்
Mar 21 2023 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உயிரிழந்த கோயில் காளைக்கு ஊர் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கீரிப்பட்டியில் மூணாண்டி கோயிலுக்கு பக்தர் ஒருவர் நேர்ந்து விட்ட காளையை 20 ஆண்டுகளாக கிராம மக்கள் வளர்த்து வந்தனர். இந்நிலையில், புகழ்பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற கோயில் காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இதனையடுத்து, இறந்த கோயில் காளையை ஊர் மந்தையில் வைத்து கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.