மதுரையில் சந்தன மரக் கட்டைகளை கடத்திய இரண்டு பேர் கைது : 7 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் - மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு
Mar 24 2023 2:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரக் கட்டைகளை கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாலமேடு போலீசார் ரோந்து சென்றபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது முண்ணுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவர்களை சோதனையிட்டபோது ஏழு சந்தன மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து நத்தம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.