திருப்பத்தூர் அருகே கையால் உடைக்கும் அளவுக்கு தரமற்ற சாலை போடப்பட்டதாக குற்றச்சாட்டு
Mar 24 2023 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பத்தூர் அருகே கையால் உடைக்கும் அளவுக்கு தரமற்ற சாலை போடப்பட்டுள்ளது. சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்டதால் ஆட்சியரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆதங்கத்தை தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆண்டியப்பனூர் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆண்டியப்பனுார் பகுதி 8வது வார்டு மேல் தெரு மற்றும் குறிஞ்சி வட்டத்தை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பகுதியில்
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் சாலைகள் குண்டும் குழியுமாக
இருந்ததாக குறிப்பிட்டனர். தற்போது சுமார் 210 மீட்டருக்கு பேவர் பிளாக் சாலை அமைத்து இருப்பதாகவும், ஆனால் கையால் உடைத்தாலே பேவர் பிளாக் கல் சல்லி சல்லியாக உடையும் அளவிற்கு தரமற்றதாக இருப்பதாக குற்றம்சாட்டினர். இதனையடுத்து தரமற்ற சாலை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.