கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த சாலை மீது இரவோடு இரவாக தார்சாலை அமைத்த நெடுஞ்சாலைதுறையினர்
Mar 24 2023 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த சாலை மீது இரவோடு இரவாக நெடுஞ்சாலை துறையினர் தார்சாலை அமைத்துள்ளனர். சின்னசேலம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் 2 கிலோ மீட்டர் சாலைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை துறையினர் சாலை மீது தார்சாலை போட்டனர். இதற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் தகவல் கேட்டதால் இரவோடு இரவாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை அமைத்ததாக கணக்கு காண்பித்துள்ளனர். தலைமை செயலாளர் மற்றும் நீதிமன்றங்கள் தார்சாலை மீது தார்சாலை அமைக்க கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சின்னசேலத்தில் தார் சாலை அமைப்பதில் நெடுஞ்சாலை துறையினர் பல முறைகேடுகளை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.