காரைக்குடி நிதி நிறுவனம் ரூ.300 கோடி மோசடி வழக்‍கு : நிதி நிறுவன இயக்குனர்கள் 24 பேரின் முன்ஜாமீன் மனுக்‍களை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை தள்ளுபடி

Mar 24 2023 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆலயம் நிதி நிறுவனம் 300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் இயக்குனர்கள் முன்ஜாமின் கோரிய மனுக்‍களை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை தள்ளுபடி செய்தது. சந்திரா என்பவர் உள்ளிட்ட பாதிக்‍கப்பட்ட முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் நிறுவன இயக்குனர்கள் 24 பேர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்‍கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஒவ்வொருவரும் தலா 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்தால் முன்ஜாமின் வழங்குவதாக நிபந்தனை விதித்தார். இதை மனுதாரர்கள் ஏற்காததை அடுத்து அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00