சொத்து வரி, தொழில் வரியினை செலுத்த தவறினால் அபராதம் : சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Mar 24 2023 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரி, தொழில் வரியினை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும் 200 வார்டுகளும் உள்ளது. இந்நிலையில் 2022-23 நிதியாண்டு வரும் 31ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், சொத்து வரி மற்றும் தொழில் வரி நிலுவையில் வைத்துள்ளவர்கள் விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வரும் 31ம் தேதி கால அவகாசம் முடிவதற்குள் வரி நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீண்டகாலமாக செலுத்தாதவர்களின் சொத்துக்கள் சீல் வைக்கப்படும் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.