தகுதி இல்லாத உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களை நீக்கம் செய்யக்கோரிய வழக்கு : உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

Mar 24 2023 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தகுதி இல்லாத உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களை, நீக்கம் செய்யக்கோரிய வழக்கில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் பதிலளிக்க, உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022-ல் வெளியான உணவு பாதுகாப்பு சேவை துறை அரசாணையின்படி, பயிற்சி அளிக்கப்பட்டு அதன்மூலம், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தேர்வெழுதி பதவிக்கு வருவோர் அரசாணையால் பாதிக்கப்படுவர், எனவே அதனை ரத்துசெய்து, அதன்படி பணியில் சேர்ந்தோரை விடுவிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00