மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 5 பேர் காயம்
Mar 24 2023 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 5 பேர் காயம் அடைந்தனர். வி.புதூரில் உள்ள ஆண்டிகருப்பு, முத்துபிடாரி அம்மன் கோயில் உற்சவத்தை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், சீறிப்பாய்ந்து ஓடின. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை பெண்கள் உட்பட ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.