சேலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் கைது - பெண் ஊழியர் பலியானதை அடுத்து பாதுகாப்பற்ற முறையில் ஆலை நடத்தியதாக கைது
Mar 24 2023 6:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி அருகே வெள்ளாளபுரத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 2 நாட்களுக்கு முன், நடைபெற்ற தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில், அமுதா என்ற பெண், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேடப்பன் என்ற மற்றொரு ஊழியர், படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு தயாரிப்பு நிலையம் நடத்தி வந்ததாக கூறி, உரிமையாளர் குமார் என்பவரை, கொங்கணாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.