புதுக்கோட்டை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களாக வீணாகும் நீர் - அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Mar 24 2023 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக நீர் வீணாக செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அரிமளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லு பட்டியிலிருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வெள்ளாற்று பாலம் வழியாக மேட்டுப்பட்டி மற்றும் திருமலைராய சமுத்திரம் கிராமத்திற்கு குழாய் மூலம் குடிநீர் சென்றடைகிறது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு 15 நாட்களாக காவிரி குடிநீர் வீணாகி செல்கிறது. அதிகாரிகள் உடனடியாக உடைந்த பைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.