கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை : கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
Mar 25 2023 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தனது வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சுப்பிரமணியின் மனைவி செல்வியும், ஜெயமுருகனும் சேர்ந்து பூச்சிக்கொல்லி மருந்தை மதுவுடன் கலந்து வைத்திருந்தது தெரியாமல், அதை அருந்திய சுப்பிரமணியன் உயிரிழந்துள்ளார் என்று தெரிந்தது. இந்நிலையில், செல்வி மற்றும் ஜெயமுருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 31,500 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.