பருவமழை ஏமாற்றியதால் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 25 அடியாக கிடுகிடுவென சரிந்தது
Mar 25 2023 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பருவமழை ஏமாற்றியதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 25 அடியாக கிடுகிடுவென சரிந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் அணை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் காரையார் அணையில் தற்போது சுமார் 25 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24 கனஅடியாக உள்ள நிலையில், 200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையில் இருந்து வரும் நீர் ஏப்ரல், மே மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா என்பது சவாலான காரியமாக உள்ளது. மேலும் பருவ சாகுபடி உள்ளிட்டவையும் கோடை மழையை எதிர்நோக்கியே உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.