நாகை அருகே தேவூர் காந்தி தெரு பகுதியில் அரசு பேருந்து ஓட்டுனர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது
Mar 25 2023 3:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை அருகே தேவூர் காந்தி தெரு பகுதியில் அரசு பேருந்து ஓட்டுனர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பேருந்து ஓட்டுநர் பாஸ்கரின் தம்பி, தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் ஓசியில் சரக்கு கேட்டு புகழேந்திரன், அஜித் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு, பாரில் இருந்த பாஸ்கரின் வேன் ஓட்டுநர் பிரவீன்குமாரை அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவரையும் பாஸ்கர் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள் இரவில் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலச்சுந்தரம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக புகழேந்திரன், அஜித் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.