திருத்தணியில் பட்டப்பகலில் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்ற இளைஞர்கள் - தடுக்க முயன்ற பெண்ணை பிளேடால் தாக்கிய சம்பவம்
Mar 25 2023 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றபோது, பெண்ணை பிளேடால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணியில் வசித்து வரும் லல்லி சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்கி சென்று திருத்தணியில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், திருத்தணிக்கு ரயிலில் பயணிக்கும்போது, இளைஞர்கள் சிலர் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது, தடுக்க முயன்ற லல்லியை இளைஞர்கள் பிளேடால் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். இதனால், காயமடைந்த லல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.