தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கு : நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது
Mar 25 2023 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த 22 ஆம் தேதி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் முன்விரோதம் காரணமாக பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்த வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.