சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது - குளத்தை சுத்தமாக பராமரிக்க பக்தர்கள் வேண்டுகோள்
Mar 25 2023 4:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்த வாரி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து, துர்நாற்றம் வீசுகிறது. சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் உள்ளன. இந்த மீன்களுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பொரி போடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சிவகங்கை தீர்த்தவாரி குளத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வருவதாக தெரிகிறது. இதனால் குளத்தை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. இறந்த மீன்களை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.