திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை திருட்டு - உதவுவதுபோல் நடித்து குழந்தையை திருடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
Mar 26 2023 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியா கடந்த 19-ம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, சத்தியாவை வேறு வார்டுக்கு மாற்றம் செய்யும்போது, பெண் ஒருவர் உதவுவது போல் நடித்து பிறந்து 6 நாளேயான ஆண் குழந்தையை கடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, தெற்கு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முகக்கவசம் அணிந்த பெண் குழந்தையை கடத்தி சென்றதாக தெரியவந்துள்ளது. மேலும், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.