திருப்பூர் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு - உதவுவதுபோல் நடித்து குழந்தையை திருடிய பெண்ணை 10 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்
Mar 26 2023 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் அரசு மருத்துவமனையில் திருடப்பட்ட பச்சிளம் குழந்தையை 10 மணிநேரத்தில் பத்திரமாக மீட்ட போலீசாரை உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.
திருப்பூர் செரங்காடு பகுதியை சேர்ந்த கோபியின் மனைவி சத்தியாவிற்கு கடந்த 19-ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், சத்தியாவிடம் பெண் ஒருவர் உதவுவது போல் நடித்து பிறந்து 6 நாளான ஆண் குழந்தையை திருடி சென்றார். இதனையடுத்து, இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து திருப்பூர் தெற்கு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அடுத்த 10 மணி நேரத்தில் இடுவம்பாளையம் பகுதியில் பாண்டியம்மா என்ற பெண்ணிடம் இருந்த குழந்தையை மீட்டு தாய் சத்தியாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.