மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் எனக்கூறி பண மோசடி செய்ய முயன்ற கைதி - கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்த போலீசார்
Mar 26 2023 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் எனக் கூறி பண மோசடி செய்யமுயன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் பிரபல ஜவுளி நிறுவன உரிமையாளர் கோபிநாத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் பேசுவதாக அழைப்பு வந்துள்ளது. மேலும் தனது வங்கி கணக்கில் உடனடியாக 75 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் அவர் கூறினார். இதில் சந்தேகமடைந்த கோபிநாத், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் சிறையில் தண்டனை கைதியாக உள்ள சந்தான பாரதி எனும் நபர் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.