ஓசூர் அருகே விளைநிலத்தில் மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு - வரப்பில் புல் அறுத்தபோது மின்சாரம் தாக்கி பலி
Mar 26 2023 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே விளைநிலத்தில் புல் அகற்றியபோது தரையில் அமைக்கப்பட்ட மின்வயரிலிருந்து மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ், பேரிகை அருகேயுள்ள சீனிவாசன் என்பவரது நிலத்தின் வரப்பில் கால்நடைகளுக்காக புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தபோது அதிலிருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.