பெரம்பலூரில் காதல் திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக் கொலை - தாயுடன் சேர்ந்து கொலை செய்த மகனுக்கு போலீசார் வலைவீச்சு
Mar 26 2023 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில் காதல் திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட தந்தையை தாயுடன், சேர்ந்து மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதனகோபாலபுரம் பாரதிதாசன் முதல் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், மனைவி மலர்கொடி, மகன் வெங்கடேஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், தழுதாழை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, வெங்கடேஷ் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ராமகிருஷ்ணன் மகன் வெங்கடேஷ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் ராமகிருஷ்ணனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தலைமறைவான இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.