சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற எதிர்ப்பு - 3 மணி நேரம் கட்டிடத்தின் மீது ஏறி இளைஞர் ரகளை
Mar 26 2023 4:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூரில் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து மற்றொரு இல்லத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, கட்டிடத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். காகிதபட்டறை ஆற்காடு சாலையில் சமூகப்பாதுப்புத் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்குகிறது. இங்கு, பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 18 வயது முதல் 21 வயதுடையை இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு இளைஞரை மாற்றயிருந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்து அந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டார். கட்டிடத்தின் மீது ஏறி மூன்றரை மணி நேரமாக ரகளை செய்த இளைஞரிடம் நீதிபதி நேரில் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கீழே இறங்கினார்.