குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதால் தான் ராகுல் காந்தி மீது நடவடிக்கை - வழக்கில் இருந்து தப்ப தேவையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் கூறிவருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்
Mar 26 2023 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதால் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூறுவதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மீன்வளத்துறை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மதுரை தெற்கு வெளி வீதியில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களோடு அமர்ந்து பிரதமரின் மான் கி பாத் உரையை தொலைக்காட்சி மூலம் கேட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ராகுல்காந்தி விஷயம் சட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது என்றும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசியதால் ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ராகுல்காந்தி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.