திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய ஆயுதப்படை காவலர் - பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவலர் சிறையில் அடைப்பு
Mar 26 2023 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய ஆயுதப் படை காவலரை போலீசார் சிறையில் அடைத்தனர். வளையபூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார். இளையராஜாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ரத்தினதேவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கமுதி மகளிர் காவல் நிலையத்தில் ரத்தின தேவி இளையராஜா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார். இதனை அடுத்து கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.