நெல்லையில் விசாரணைக்‍ கைதிகளின் பற்களை பிடுங்கிய புகார் : கூடுதல் எஸ்.பி. பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

Mar 27 2023 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

விசாரணைக்‍ கைதிகளின் பல்லைப் பிடுங்கிய புகாரில் நெல்லை கூடுதல் எஸ்.பி. பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்‍கு மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றம் செய்த நபர்கள் 10 பேரின் பற்களை, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயனுக்‍கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் கூடுதல் எஸ்.பி. பல்வீர் சிங் மீது நடவடிக்‍கை எடுத்து தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00