சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைய வந்த 3 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம்

Mar 27 2023 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைய வந்த 3 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. பெருங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கடந்த 25ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த முருகன், பிரவீன், ஸ்ரீதர் உள்ளிட்ட 3 இளைஞர்கள் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அப்போது அவர்களது சரண்டர் மனுவை ஏற்க கூடாது எனக் கூறி வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரண்டர் மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து நீதிபதி ராதிகா, அவரது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்‍க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை அழைத்துச் சென்றபோது வழக்‍கறிஞர்கள் சிலர் தாக்‍குதல் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00