வெளிநாட்டு வேலை ஆசை வார்த்தை கூறி திருவண்ணாமலையில் 150 பேரிடம் ரூ. 1.50 கோடி மோசடி : பணத்தை பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்டோர் சாலைமறியல்
Mar 27 2023 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி திருவண்ணாமலையில் 150 பேரிடம் ஒன்றரை கோடி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை பெற்றுதரக்கோரி நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகரில் உள்ள வேட்டவலம் சாலையில், பிரேம்குமார் என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.