சென்னையில் 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐபோன் திருட்டு : வீட்டில் பணிபுரிந்த நபருக்கு போலீசார் வலைவீச்சு
May 25 2023 4:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் வீட்டில் தங்க நகைகளை திருடிய வழக்கில், வீட்டில் பணிபுரிந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். அசோக்நகரை சேர்ந்த ஜலீல் அகமது பழைய போன்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவரது வீட்டில் புதுக்கோட்டையை சேர்ந்த லூமனா மரைக்காயர் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பஜாருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு 45 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐபோனை அவர் கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகாரின் பேரில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.