செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் இறந்த விவகாரம் : கைது செய்யப்பட்ட 6 பேரின் கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டை
May 25 2023 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு மாவட்டம் ஓதியூர் சூனாம்பேடு பகுதியில் கள்ளச்சாராயம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என 40-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையிட்டனர். மதுராந்தகம் அருகே பேரம்பாக்கம் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி 8 பேர் இறந்த நிலையில், இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஓதியூர், கடப்பாக்கம் , பனையூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் ஓதியூர் கடற்கரை பகுதி மற்றும் சூனாம்பேடு பகுதிகளில் செங்கல்பட்டு டிஎஸ்பி பரத் தலைமையில் 3 காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.